மனிதர்களை சாப்பிடும் படித்த நாலு வேதாளங்கள் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திற்கு வேலைக்காக சென்று, தேர்வும் ஆகிட்டாங்க.
மென்பொருள் நிறுவனர் வேதாளங்களை பார்த்து, நீங்க கடுமையாக உழைக்கணும், மேலும் நீங்க சாப்பிட கேண்டீனில் எல்லாமே கிடைக்கும், அதை தவிர எதையும் நீங்க சாப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டார்.
அடுத்த வாரமே மென்பொருள் நிறுவனர் வேதாளங்களை அழைத்து, நீங்க அருமையாக வேலை செய்றீங்கன்னு பாராட்டினார்.
நான்கு வாரங்களுக்கு பின்னர் மென்பொருள் நிறுவனர் அழைத்து, வேதாளங்களை பார்த்து "உங்களுடைய கடுமையான உழைப்பை கண்டு வியக்கிறேன், இதுவரை யாரும் உங்களைப் போல் வேலை செய்து பார்த்ததில்லை, பாராட்டுகிறேன், அதே நேரம் நம் கம்பெனியில் ஒரு மென்பொருள் வல்லுநர் ஒருவரை காணவில்லையாம், நீங்கள் காரணமா? " என்றார்.
உடனே வேதாளங்களும் சத்தியமாக நாங்க இல்லைன்னு சொல்லவும் நிறுவனர் அங்கிருந்து சென்று விட்டார்.
வேதாளங்களின் தலைவன், யாருடா அந்த மென்பொருள் வல்லுநரை சாப்பிட்டது என்று கோபமாக கேட்க. ஒரு வேதாளம் நடுங்கியபடி கையை தூக்கியது.
உடனே வேதாளங்களின் தலைவன் "அடே முட்டாளே! கடந்த நாலு வாரத்தில் 40 மேனேஜர்கள், 20 மேற்பார்வையாளர்களை சாப்பிட்டு இருக்கிறோம், அப்போ எல்லாம் கண்டுபிடிக்காத இவர், இப்போ எப்படி கண்டுபிடித்தார், அதான் அன்னைக்கே சொன்னேன், வேலை செய்யும் எவரையும் சாப்பிடாதீங்க, இப்போ பாருங்க, அவர் இல்லாதது தனியாக தெரிந்து விட்டது, இனிமேல் ஜாக்கிரதையாக இருங்க" என்றதாம்.

நினைவேறுகிறது…
மறுமொழிகள்